Skip to main content

Posts

Showing posts from April, 2023
*பங்குனி உத்திரம் பெருமை* தெய்வ திருமணங்கள் நிகழ்ந்த பெருமை மிகு பங்குனி உத்திரம்…!! மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான். மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை இந்நாளில் பெற்றார். தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. புண்ணிய திருநாளான பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு கருங்காலி கட்டை வேலை வைத்து வழிபட்டால் சொந்தவீடு, மனை வாங்கும் யோகம் அமையும். மன பயம் நீங்கி தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்க