Skip to main content

Posts

Showing posts from May, 2023
#*பெருங்குளம்- செங்கோல் ஆதீனம் வரலாறு!* ————————————— *பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி (Thaamirabharani) கரை அருகே மூத்த தமிழ் இலக்கிய படைப்பாளி மாதவையா, அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி பிறந்த பெருங்குளத்தில் அமைத்துள்ள சைவ மடமாகும். இந்த ஆதீனம் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்று வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது*. முற்காலத்தில் 18வது பட்டம் குருமகா சன்னிதானம் திகம்பர சித்தர் காலத்தில் சோழ மன்னரிடம் போரிட்டு வென்ற பாண்டிய மன்னர் பெருஙகுளத்தில் திகம்பர சித்தருக்கு மடம் அமைத்து அவரை வழிபாடு செய்து அவர் வழங்கிய செங்கோலை பெற்று மகிழ்ந்தான் தொடர்ந்து கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு அக்காலத்தில் செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்ற ஆதீனமாக பெருங்குளம் ஆதீனம் ஒரு காலத்தில் இருந்து வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என்ற ஒரு சிறப்புப் பெயர் அக்காலம் முதலே இருந்து வருகிறது 102ஆவது மடாதிபதியின் பூர்வாசிரமஅரசு அனுமதியுடன் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சம
#பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா. அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்…. கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் #காணிக்கை… யாசிப்பவருக்கு கொடுத்தால் #பிச்சை… அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை…. கல்விக் கூடங்களில் #கட்டணம்… திருமணத்தில் #சீதனம்…. திருமண விலக்கில் #ஜீவனாம்சம்…. விபத்துகளில் இறந்தால் #நஷ்டஈடு… இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் #காப்பீடு…. வங்கிகளில் வைத்தால் #வைப்புந்தொகை… ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் #தர்மம்…. நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #தானம்… திருமண வீடுகளில் பரிசாக #மொய்… திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #கடன்…. திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #அன்பளிப்பு… விரும்பிக் கொடுத்தால் #நன்கொடை…. நீதிமன்றத்தில் செலுத்தினால் #அபராதம்…. அரசுக்குச் செலுத்தினால் #வரி…. அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #நிதி… செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம்… தினமும் கிடைப்பது #கூலி… பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம்….. சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #லஞ்சம்…