Skip to main content

இந்தியர்களின்

இணையற்ற கண்டுபிடிப்புகள்.

பருத்தி

இன்று உலகமே பெருமிதத்தோடு உடுத்துவது பருத்தி இழைகளில் நெய்த காட்டன் ஆடைகளைத் தான்.

சிந்துவெளி நாகரிக காலத்திலேயே இந்தியர்கள் பருத்தி இழைகளில் நெய்த ஆடைகளை அணிந்திருந்தனர்.

பட்டன்.

பட்டன் என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால், நாகரிகம் என்ற வார்த்தையே உருவாகி இருக்காது.

சிந்துவெளி நாகரிகமான மொகஞ்சதாரோவில் தான் முதன் முதலாக பட்டன் உருவானது.

செஸ்

செஸ் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது.

நம் மண்ணில் தான் சதுரங்க விளையாட்டு தோன்றியது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசு காலத்தில் தான் செஸ் அறிமுகமானது.

ரெடிமேட் வீடுகள்.

அதிக எடையில்லாத உலோகங்களில் ரெடிமேட் சுவர்கள் செய்து, அடுக்கி சில மணி நேரங்களில் உருவாக்கும் இந்த ரெடிமேட் வீடுகள்,

500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உருவாகி விட்டது.

ரூலர்

ஸ்கேல் என்ற அளவுகோலுக்கு முன்னோடி தான் இந்த ரூலர்.

உருண்டு நீண்டிருக்கும் ரூல் தடி எனப்படும் இந்த ரூலரால் தான் அந்த காலத்தில் நீளத்தை அளப்பார்கள்.

சிந்துசமவெளி காலத்தில் யானை தந்தம் கொண்டு ரூலர் செய்து பயன்படுத்தினர்.

ஷாம்பு

தலைக்கு சீயக்காய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை மாற்றியது இந்த ஷாம்பு.

1762 ஆம் ஆண்டு வங்காள நவாபுக்காக அவரது பணியாளர்கள் உருவாக்கியதே இந்த ஷாம்பு.

எண்களும் பூஜ்ஜியமும் .

தசம எண் வரிசையை அரேபியர்களுக்கு முன்பு பயன்படுத்தியது நாம் தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான எண் வரிசையை ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம குப்தர் என்ற கணித அறிஞர் சீரமைத்துக் கொடுத்தார்.

அறுவை சிகிச்சை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஸ்ருதர்,

ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சையின் தந்தையாக கருதப்படுகிறார்.

அதேபோல் இன்று முகத்தை அழகு படுத்தும் பிளாஸ்டிக் சர்ஜரி எனும் அறுவை சிகிச்சையின் தந்தையும் இவர் தான்.

வைரம்

மண்ணுக்குள் புதைந்திருக்கும் வைரக்கல் அரிதான ஒரு கல் என்பதையும்,

அதை பாலிஷ் செய்தால் பளபளக்கும் என்பதையும் கண்டறிந்து,

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபரணங்கள் செய்து பயன்படுத்தினர் இந்தியர்கள்.

வயர்லெஸ்

கம்பியில்லா தகவல்தொடர்பு எனப்படும் வயர்லெஸ் டெக்னாலஜியை கண்டறிந்தவர்,

நம் நாட்டின் விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் தான்.

அவரால் அந்த அங்கீகாரத்தை பெற முடியாமல் போய்விட்டது.

கண்ணாடி இழை வயர்.

தொலைத்தொடர்பு வசதிகளை மிக எளிமையாக ஆக்கியவை ஃபைபர் ஆப்டிக் கேபிள் எனப்படும் கண்ணாடி இழை வயர்கள்.

இந்த வயரைக் கண்டறிந்தவர் இந்தியரான நரேந்திர சிங் கபானி என்பவரே.

நம்மாலும் முடியும்.

நம்மில் பலருக்கும் இது தெரியாமல் இருந்தது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பாரம்பரியமும் பழம் பெருமைகளுமே சிலரை சுயசார்புடன் வாழ விடாமல் சிறைப்படுத்துகிறது.

நாம் உண்மையாக வாழ்ந்தால்,

உண்மையான இலக்கை அடையலாம்.

இனிய காலை வணக்கம்.

💐🌷🙏🙏🙏🌷💐

Comments

Popular posts from this blog

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓசூரில் வேலைவாய்ப்பு

Co1+ Logo